ஏன் திடீரென விசேட பாதுகாப்பு?

நாட்டில் ஏன் திடீரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதா அல்லது பிரபாகரன் மீண்டும் வரப்போகின்றாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் நளின் பண்டார.

நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய அவர்,

” பிங்கியவில் இருந்து நாடாளுமன்றத்துக்கு வரும்வழியில் 21 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 சாவடிகளில் எனது வாகனம் நிறுத்தப்பட்டது. காலை 6 மணிக்கு வந்தும், சோதனையால்தான் தாமதம் ஏற்பட்டது.

எதற்காக திடீர் பாதுகாப்பு? நாடாளுமன்றம்மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதா அல்லது பிரபாகரன் மீண்டும் வரப்போகிராறா? என்னால் அல்ல, அமைச்சர் சரத்வீரசேகரவால்தான் எனக்கு தாமதம் ஏற்பட்டது. எனவே, கேள்வி எழுப்ப வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.

எனினும், அவருக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. பதிலகள் சபையில் முன்வைக்கப்பட்டன.

Related Articles

Latest Articles