அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடா?

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் கிடையாது எனவும் அது தொடர்பான எதிர்க்கட்சியினரின் கூற்று தவறானது என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் 663 அத்தியாவசிய மருந்துகள் உள்ளதாகவும் அவற்றில் 15 மருந்துகளுக்கான குறைபாடுகள் நிலவுகின்ற நிலையில் 8 மருந்துகளுக்கு பதில் மாற்று மருந்துகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அவர் அடுத்த வாரமளவில் மேலும மருந்துகள் நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் நாட்டில் பெருமளவு அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் கூற்றுக்களில் எந்தவித உண்மையும் கிடையாது என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles