மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பை விடுத்தார் அனுசா!

நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் தெரிவித்தார்.

‘நம்ம அண்ணாச்சி’யுடன் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடலின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

அத்துடன் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் அப்போதைய அரசியல் களநிலைவரத்தை அடிப்படையாகக்கொண்டே முடிவெடுக்கப்படும் எனவும் அனுசா சந்திரசேகரன் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தனித்துவத்தை நிரூபித்துவிட்டோம் எனவும், இனிதான் வெற்றி பயணம் ஆரம்பமாகும் எனவும் அனுசா சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles