கோப் குழுவின் தலைமைப்பதவி மீண்டும் சரிதவுக்கு…!

கோப் (COPE) எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் மீண்டும் நியமிக்கப்படவுள்ளார் என அறியமுடிகின்றது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஜனாதிபதி இடைநிறுத்தியதால் கோப் உள்ளிட்ட குழுக்களின் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டன.

புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளதால் மேற்படி குழுக்களுக்கு புதியவர்களை நியமிக்க வேண்டும். அந்தவகையில் கோப் குழுவின் தலைமைப்பதவியை சரித ஹேரத்துக்கே மீண்டும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

Related Articles

Latest Articles