அந்நியச் செலாவணி நெருக்கடி குறித்து அரசுடன் ஆடைத் துறை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது: JAAF

ஒன்றிணைந்த ஆடைத் தொழிற்சாலை சங்கங்களின் மன்றமான (JAAF) தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் அதிக எண்ணிக்கையிலான பங்குதாரர்களின் ஒத்துழைப்பிற்கும், அத்துடன் இலங்கையில் ஆடைகளுக்கான மிகவும் நிலையான மற்றும் நீண்ட காலப் பாதைக்கான சட்டச் சீர்திருத்தத்திற்கும் வலுவான உரையாடலுக்கு அழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

விநியோகச் சங்கிலி பங்குதாரர்கள், ஏற்றுமதி சார்ந்த ஆடை உற்பத்தியாளர்கள், கொள்வனவு அலுவலகங்கள் மற்றும் இலங்கையில் உள்ள சர்வதேச வர்த்தகநாமங்களின் பிரதிநிதிகள் உட்பட ஐந்து சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த ஐந்து அமைப்பான மன்றத்தின் சமீபத்திய வருடாந்த பொதுக் கூட்டத்தில் (AGM) இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

கூட்டத்தில் உரையாற்றிய JAAF-ன் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவரும், MASஇன் துணைத் தலைவருமான ஷராட் அமலியன், தொற்றுநோய் பரவினாலும் வணிகச் சமூகத்தைத் தொடர்ந்து அவர்கள் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்காக பாராட்டினார், மேலும் இருதரப்பு வர்த்தகத்தையும் GSP+ஐயும் 2025-க்குள் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலக்காகக் கொண்டு வெற்றிகரமாகப் பேணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதையும் குறிப்பிட்டார்.

“மீண்டும் ஒருமுறை, இலங்கை ஆடைகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் குறிப்பிடத்தக்க செயற்திறனைப் பெற்றுள்ளதுடன், கடந்த ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான ஏற்றுமதியை ஈட்டியுள்ளது. ஆனால் இன்னும் பல தடைகள் நம் முன்னால் உள்ளன.

இந்த நிச்சயமற்ற காலங்களில் வெற்றிபெற, அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதும், அந்நிய செலாவணி பிரச்சினைகள் மற்றும் எங்கள் தொழில்துறையின் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யக்கூடிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது குறித்தும் அதிகாரிகளுடன் தொடர்ந்து உரையாடலில் ஈடுபடுவது அவசியம்.” என அமலியன் வலியுறுத்தினார்.

“வணிக உறவுகளை மேம்படுத்த பிராந்திய பங்காளிகள் மற்றும் சங்கங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நமது இருதரப்பு வர்த்தகத்தை மேலும் மேம்படுத்த வேண்டும். 2023க்கு அப்பால் GSP+ சலுகைகளைப் பெறுவது நமது தொழில்துறையின் வளர்ச்சிக்கு முக்கியமானது.” என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், JAAFஇன் முன்னாள் தலைவர் ஏ. சுகுமாரன், எதிர்வரும் ஆண்டில் தொழில்துறை தங்கள் விநியோகச் சங்கிலியில் இடையூறுகளைச் சந்திக்கும் என்றும், தொழில்துறையின் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளை உருவாக்குவதற்கு தொழில் பங்குதாரர்களிடையே தொடர்ச்சியான ஈடுபாடு ஒரு முன்நிபந்தனையாகும்.

“தொற்றுநோய் எங்கள் பரந்த உலகளாவிய விநியோகச் சங்கிலியின் பாதிப்பை உள்நாட்டில் அதிகரித்துள்ளது. இருப்பினும், தேசிய விநியோகச் சங்கிலிகளைப் புறக்கணித்து சர்வதேசமயமாக்குவதே சரியான தீர்வு என்று நாங்கள் நம்பவில்லை. நாம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சனைகளில் கூட, உலகமயமாக்கலில் ஒப்பீட்டு நிதி நன்மைகள் உள்ளன. எவ்வாறாயினும், உலகளாவிய தளத்தில் திறம்பட போட்டியிடுவதற்கு, இலங்கை நிறுவனங்களின் திறன் அடையாளம் காணப்பட வேண்டும் மற்றும் திறன் மேம்பாட்டை துரிதப்படுத்தக்கூடிய பகுதிகள் அவசியம்.”

“குறைவான பரிவர்த்தனைகள் மற்றும் அதிக கூட்டு விநியோக சங்கிலி உறவுகளில் முதலீடு செய்வது முக்கிய தீர்வாகும். இது எங்கள் தொழில்துறையில் பல்வேறு சவால்களை சமாளிக்கும் திறன் கொண்ட மீள்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகளை உருவாக்குகிறது. அதன் வளர்ச்சியானது நாம் வாங்குபவர்களுடன் நாம் வைத்திருக்கும் நீண்ட கால உறவுகளைப் பொறுத்தது. அதற்கு, ஒரு சமநிலையான மூலோபாயம் அவசியம்.” என திரு. சுகுமாரன் மேலும் கூறினார்.

AGMஇல், JAAFஇன் புதிய செயற்குழு 2022/2023 க்காக நியமிக்கப்பட்டது, அதன் தலைவர் திரு. ஷராட் அமலியன், துணைத் தலைவர்கள் திரு. சைபுதீன் ஜாஃபர்ஜி மற்றும் திரு. பீலிக்ஸ் பெர்னாண்து மற்றும் முன்னாள் தலைவர்கள் திரு. நோயல் பண்ரியாதிலக, திரு. அசிம் இஸ்மாயில் மற்றும் திரு. அஷ்ரப் உமர். முக்கிய நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளான கைத்தறி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் திரு. புபுது டி சில்வா, சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர் சங்கத்தின் திரு. ஜதீந்தர் பீலா, இலங்கை ஆடை ஏற்றுமதியாளர் சங்கத்தின் திரு. அருண் ஹைட்ராமணி மற்றும் இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் திரு வில்ஹெல்ம் எலாயஸ் ஆகியோர் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மகேஷ் ஹைட்ராமணி, மாணிக் சாந்தியப்பிள்ளை, அஜித் விஜேசேகர, ஜாஃபர் சத்தார், அனிஸ் சத்தார், ரெஹான் லக்கானி மற்றும் மஹிகா வீரகோன் ஆகியோர் செயற்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

இதற்கிடையில், JAAFஇன் ஸ்தாபக பொதுச் செயலாளரான டுல்லி குரே, தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்று, எதிர்காலத்தில் ஆலோசகராக பணியாற்றுவார்.

அவருக்குப் பதிலாக இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தொழிற்துறையில் அனுபவமிக்கவருமான ஜொஹான் லோரன்ஸ் நியமிக்கப்படவுள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles