புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நாளை

புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை இடம்பெறக்கூடும் என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

புதிய அமைச்சரவை, நாளை காலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமைச்சரவையில் 15 பேருக்கே இடமளிக்கப்படவுள்ளது. கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச தவிர ஏனைய ராஜபக்சக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்.

அத்துடன், புதுமுக உறுப்பினர்கள் அமைச்சரவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

Related Articles

Latest Articles