உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
” தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்காக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து தயவு தாட்சணையின்றி தண்டிக்கப்படுவார்கள் என்பதாகும்.
எனவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.” – எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.