வட்டகொடை கீழ்பிரிவு தோட்டத்தில், தோட்ட முகாமையாளருக்கு எதிராக தோட்ட மக்கள் இன்று (5) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்டத் தொழிலாளியொருவரை ஏளனமாக விமர்சித்து – மிரட்டி அவரை தாக்க முற்பட்ட துரைக்கு எதிராகபே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என மக்கள் தெரிவித்தனர்.
குறித்த துரையை தோட்டத்தை விட்டு வெளியேற்றும்வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்