மஸ்கெலியா, சாமிமலை நகரில் நேற்றிரவு ஐந்து இளைஞர்கள் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி யசரத்ன பண்டாரவின் வழிகாட்டலுக்கமையவே இக்கைது இடம்பெற்றுள்ளது.
கைதானவர்கள் 21 முதல் 30 வயதுக்கிடைக்கப்பட்ட இளைஞர்கள் என்றும், இவர்களில் ஒருவர் சாமிமலை பகுதியைச் சேர்ந்தவர்,ஏனையவர்கள் ஹட்டனை சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடமிருந்து கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்