சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் உட்கட்சி மோதல் உக்கிரமடைய ஆரம்பித்துள்ளது.
பிரதமர் பதவியை சஜித் பிரேமதாச ஏற்காததால் அதிருப்தியடைந்த ஹரின் பெர்ணான்டோ, மனுச நாணயக்கார , வடிவேல் சுரேஷ் ஆகியோர் கட்சியிலிருந்து விலகி, அரசுடன் இணைந்து அமைச்சு பதவியை ஏற்றுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக, எதிர்கால அரசியல் பயணத்தை தொடரவும் திட்டமிட்டுள்ளனர்.
கருஜயசூரியவை தேசியப்பட்டியல் எம்.பியாக்கி, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கலாம் என கபீர் ஹாசீம் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர். இதற்காக தனது தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை விட்டுக்கெடுக்க ,மயந்த திஸாநாயக்க தயாராகவே இருந்துள்ளார். இந்த முயற்சி வெற்றியளிக்காததால் கபீர் ஹாசீம் உள்ளிட்ட தரப்பும் மனமுடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.
சரத்பொன்சேகா, ராஜித சேனாரத்ன போன்றவர்கள் சஜித்தை தவறாக வழிநடத்துகின்றனர் என மேலும் சில உறுப்பினர்கள், தமது சகாக்களிடம் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.