‘தோட்ட காணி பங்கீடு’ – வேலுகுமார் விடுத்துள்ள எச்சரிக்கை

” அரசியல் ஸ்தீரமற்ற நிலையில்,  தோட்ட காணிகளின் பகிர்வு தொடர்பாக பேசுவது ஆபத்தானதாகும்.” என   தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இன்று, நாட்டின் அரசாங்கம் யாருடையது, யாருடைய தலைமையில், கட்டுப்பாட்டில் அரசாங்கமும், அரச நிர்வாகமும் செயற்படுகின்றது என்பன தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. ஜனாதிபதி பங்கரில் இருந்துகொண்டு தனது நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கும் முயற்சியில் உள்ளார். பிரதமர் தனது கட்சிசார்ந்த சகாக்களை சேர்த்துக்கொண்டு தனது கட்சியின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதில் உள்ளார். இவ்வாறான அரசியல் ஸ்தீரமற்ற நிலையில் தோட்ட காணிகளின் பகிர்வு தொடர்பாக பேசுவது ஆபத்தானதாகும்.

இன்று நாட்டில் ஜநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியொன்று இல்லை. மக்கள் பிரதிநிதிகள் பெயரளவில் சிலரின் பிடிகளுக்கு உட்பட்டவர்களாகவே உள்ளனர். பாராளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தை வைத்திருந்த ரணில் விக்ரமசிங்க பிரதமராக உள்ளார். அவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட, தனது கட்சியின் சில சகாக்களை முன்னிலைப்படுத்தி தனது வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் பிரதிநிதிகள் ஓரக்கட்டப்பட்ட நிலையிலேயே உள்ளனர். இதனை சுட்டிக்காட்டுவதற்க்கே கடந்த வாரத்தில் எதிர்க்கட்சியான நாம் பாராளுமன்றத்தை பகிஸ்கரிப்பு செய்திருந்தோம்.

மலையக பிரதேசங்களில் உள்ள பயிரிடப்படாத தோட்ட காணிகள் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் ஒரு விடயம். இன்று நாட்டிலே ஏற்பட்டிருக்கும் உணவு பஞ்சத்துடன் மீண்டும் இவ்விடயம் பேசப்படுகின்றது. கடந்த காலம் முழுவதும் தோட்ட காணிகளின் பகிர்வில் தோட்ட மக்களுக்கு பாராபட்சம் காட்டப்பட்டு வந்துள்ளது. எல்லா பகுதிகளிலும் போல வெளியாருக்கே பெருமளவு நிலங்கள் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

இச் சூழ்நிலையில் இன்றைய அரசாங்கத்தில் மலையக பிரதிநிதிகள் எவரும் இல்லை. இருந்த சிலர் சுயாதீனமாகிவிட்டதாக கூறுகின்றனர். அரச தலைமைத்துவம் யாருடையதென்பது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இச்சூழ்நிலையில் தோட்ட காணிகளின் பகிர்வு பற்றி பேசுவது நாமே எம்மை காட்டி கொடுப்பது போன்றதாகிவிடும்.

இன்றைய அரசாங்கத்திற்கு எவ்வித அபிவிருத்தி வேலைகளையும் முன்னெடுக்க முடியவில்லை. மாவட்ட ரீதியில் உள்ள அரசாங்க பிரதிநிதிகள் தங்களது சகாக்களை திருப்திப்படுத்துவதற்கு இதனை பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு தாராளமாக உள்ளது. தற்போதே கண்டி மாவட்ட்டத்தில் கலபோட தோட்டம், தெல்தோட்டை தோட்டம், போஹில் தோட்டம் மற்றும் கிரேட் வெளி தோட்டங்களிலான பெருவாரியான நிலங்கள் வெளியாருக்கு கொடுக்கும் ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளது. அதே போன்று வுட்சைட் தோட்டம், கல்தூரியா தோட்டம் போன்றவைகளின் காணி சுவீகரிப்பு தொடர்பாகவும் பல முரண்பாட்டு நிலைமை உள்ளது.

இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தி, தோட்ட காணிகளை பாதுகாத்து, தோட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவற்றை வழங்க வேண்டும். அதை விடுத்து இன்று நிலவும் பலவீனமான அரசியல் சூழலில் தோட்ட காணிகளின் பகிர்வுக்கு முற்படுவது பெரும்பாண்மை அரசியல் பிரதிநிதிகளின் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றிக்கொள்ளவே வாய்ப்பாக அமையும். கொழும்பில் இருந்து திட்டங்களை பேசலாம், முடிவுகளை எடுக்கலாம். ஆனால், அவை பிரதேச மட்டத்தில் செயற்பாட்டிற்கு வருகின்ற போது, கட்சி அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் என பல்வேறு கெடுபிடிகள் உருவாகும். அவற்றையெல்லாம் மீறி தோட்ட காணிகளை தோட்ட மக்களுக்கே பயிரிட வழங்கக்கூடிய சூழல் இன்று இல்லை. இன்று தோட்ட மக்களை பாதுகாக்க விசேடமான நிவாரண திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும். அதனையே நாம் வலியுறுத்த வேண்டும். மாறாக பயிரிடாத காணிகளை பேசுவது, நாமே ஆபத்தை தேடிக்கொள்வதாகும். ” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles