மருதமடு பெருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

மருதமடு அன்னையின் ஆடி பெருவிழாவுக்கு இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் இம்முறை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதொடர்பாக மடு பரிபாலகர் கேட்போர் கூட்டத்தில் ஆயத்த கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மடுபரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆடிமாத பெருவிழாவுக்கு குறைந்தது இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்விழாவை முன்னிட்டு ஏற்கனவே மடுத்திருத்தலத்தில் காணப்படும் 350 வீடுகளும் பக்தர்களால் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தற்பொழுது விழாவுக்கான கொடியேற்ற நாளிலிருந்து இதுவரைக்கும் 300ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்துள்ளதுடன் தொடர்ந்து பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். வருகை தருபவர்களுக்கு உணவுகள் கிடைக்கக்கூடிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய வசதிகள் திருப்திகரமாக நடைபெற்று வருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

ஆலயப் பகுதிக்குள் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மடு பரிபாலகர் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

இதனை தொடர்ந்து பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகளை கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டது.

மடு ஆலயப்பகுதிக்குள் ஒழுக்க சீர்கேடுகள் நடைபெறாதிக்கும் முகமாக பலத்த பாதுகாப்புக்கள் கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

நுளம்புத் தொல்லைகளை தடுக்க சுகாதார சேவை திணைக்களத்தால் மருந்து விசிறிகள் தெளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான எரிபொருள் மடு பிரதேச செயலாளர் ஊடாக அரச அதிபரால் வழங்கப்பட்டு வந்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மடு ஆலயத்துக்குள் 10 நுழைவாயில்கள் இருக்கின்றபோதும் தற்பொழுதுள்ள பக்தர்களின் வருகையை கவனத்திற்கொண்டு இதுவரை 6 நுழைவாயில்கள் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles