மஸ்கெலியா நல்லதண்ணி வீதியை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவு

இன்று காலை முதல் மதியம் வரை தேசிய நில ஆய்வுகள் நிறுவன அதிகாரி ஓய்வு பெற்ற ஜெனரல் சுதந்த ரணசிங்க அவருடன் கட்டிட துறை ஆய்வாளர் வைத்திய கலாநிதி கருனாரத்தின மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட உதவி அரசாங்க அதிபர் சித்திரா கமகே மத்திய அரசின் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ரஞ்சித் அலககோன் ஆகியோர் மற்றும் நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மோகினி எல்ல பகுதிகளில் விஜயம் செய்து அங்கு ஏற்பட்ட வெடிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின் பின்னர் தற்போது பாரிய வெடிப்புகளாக உள்ள பகுதிகளில் மக்கள் செல்ல வேண்டாம் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரிக்கும் லக்சபான தோட்ட முகாமையாளருக்கும் பணிப்புரை வழங்கினர்.

தொடர்ந்து அந்த வீதியை வாகனங்கள் போக்குவரத்துக்கு அனுமதி வழங்க வேண்டாம் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கட்டளை பிறப்பித்தது உள்ள நிலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை பாரிய வெடிபுகள் ஏற்பட்டு உள்ளது என ஆய்வில் தகவல் கிடைத்தது உள்ளது என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ரஞ்சித் அலககோன் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles