நிர்வாகத்தின் கெடுபிடிகளும் தொழிற்சங்கங்களின் அசாதாரண போக்கினாலும் உடரதல்ல தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான போராட்டம் முடிவு பெறாமல் உள்ளதை அவதானிக்க முடிகிறது என்று மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
நிர்வாகத்திற்கு எதிராக கடந்த 10 நாட்களுக்கு மேல் போராடி இன்று உண்ணாவிரதம் இருந்து வரும் மேற்படி தோட்டத் தொழிலாளர்களை இன்று சந்தித்த அனுஷா சந்திரசேகரன் மேலும் இது சம்பந்தமான கருத்து தெரிவிக்கும் போது கூறியதாவது,
இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்ட ஒரு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதனால் மலையகத்திற்கு தலைமை கொடுப்பதாக கூறிக்கொள்ளும் ஏனைய தொழிற்சங்க தலைமைகள் இவ்விடயத்தில் தலையிடாமல் இருக்கின்றன.
நிர்வாகத்தின் நெருக்கடியான முடிவுகளால் தொழிலாளர்கள் மாற்று வழி இன்றி தாங்களே தங்களின் பிரச்சனைகளின் தீர்வுக்காக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளார்கள்.இந்த நிலைமையை தொடர விடுவது தொழிலாளர்களுக்கு மேலும் மேலும் நெருக்கடிகளையே கூட்டும்.
ஆகவே இவ்விடயத்தில் கட்சி பேதங்களை மறந்து தேர்தல் காலத்தில் மேடையில் கூறியதுபோல் சகல மக்களின் பிரச்சினைகளையும் நேர்மையாக கையாண்டு இந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு மலையக தொழிற்சங்கங்கள் முன்வரவேண்டுமென்றும்.
நிர்வாகங்களின் முறையற்ற போக்குகளுக்கும் மக்களின் பிரச்சினைகளில் தொழிற்சங்கங்கள் வேதம் காட்டும் செயலுக்கும் நிரந்தர முடிவு எட்டப்பட வேண்டும்.
தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்கள் நலனில் அக்கறை காட்டி செயற்படுவது போன்று தேர்தல் முடிந்த பின்னரும் நாம் அவர்களின் பிரச்சனைகளில் இணைந்திருக்க வேண்டும் வெற்றி பெறுவது மட்டும் தான் எனது நோக்கம் என்று செயற்படுவதும் நிர்வாகங்களை தொழிற்சங்க திட்டங்களுக்கு அமையவாவது கட்டுப்படுத்தாமல் விடுவதும் எமது தொழிலாளர்களுக்குப் செய்யும் அப்பட்டமான துரோகமாகவே அமையும் எனவும் அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.