104 நாட்களுக்கு பின்னர் நாளை திறக்கப்படுகின்றன பாடசாலைகள்

கொரோனா வைரஸ் பரவலையடுத்து மூடப்பட்ட பாடசாலைகள் நாளை 29 ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளன. அதன்பின்னர் நான்கு கட்டங்களின்கீழ் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும்.

இதன்படி நாளை (29) அதிபர், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை நிர்வாகத்தினர் மாத்திரமே சமூகமளிக்க வேண்டும். மாணவர்கள் பாடசாலை செல்லவேண்டியதில்லை.

இரண்டாம் கட்டாக  ஜுலை 6 ஆம் திகதி  5,11 மற்றும் 13 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும்.

ஜுலை 20 ஆம் திகதி முதல் மூன்றாம் கட்ட நடவடிக்கை ஆரம்பமாகும். 10, 12 ஆம் ஆண்டுகளில் கல்வி பயிலும் மாணவர்கள் அன்று பாடசாலைக்கு வருகைதரமுடியும்.

ஜுலை 27 ஆம் திகதி நான்காம் கட்டமாக 3,4,6,7,8 மற்றும் 9 ஆம் ஆண்டு மாணவர்களை பாடசாலைக்கு அழைத்தவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles