” வெள்ளம்,பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஆற்றை கடந்து நகருக்கு செல்லும் அவலம்”

தெல்தோட்டை பிரதேச செயலகத்துக்குட்பட்ட லூல்கந்தூர கீழ் பிரிவு தோட்ட மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக ஆற்றை கடந்தே நகருக்கு சென்று வருவதாக தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் பாலமொன்றை அமைக்குமாறு பலமுறை உரியதரப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை தமக்குரிய தீர்வு கிடைக்கவில்லையென தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

நூல்கந்தூர கீழ் பிரிவு தோட்டமானது முதல் முதலில் தேயிலைசெடி நாட்டப்பட்ட பிரதேசமாக காணப்படுகின்ற போதிலும் இப்பகுதியில் எந்தவித அபிவிருத்தி திட்டமும் முறையாக இடம்பெறவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

லூல்கந்தூர கீழ் பிரிவு தோட்டத்திலிருந்து தெல்தோட்டை நகருக்கு செல்வதற்கான பிரதான பாதை காணப்படுகின்ற போதிலும் சுமார் 3 கிலோமீற்றர் நடந்துசெல்ல வேண்டுமென்பதால் குறுக்கு வீதியாக இந்த ஆற்றை கடந்து செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆற்றை கடந்து செல்வதற்கு சுமார் 1.5 கிலோமீற்றர் தூரமே நடக்கவேண்டுமென மக்கள் தெரிவிக்கின்றனர்.

லூல்கந்தூர கீழ் பிரிவு மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் ஆகியோர் இந்த ஆற்றை கடந்தே செல்கின்றனர்.

எனினும் மழைக்காலங்களில் பெரும் அச்சத்துடன் பயணிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி பாம்புகளால் அச்சுறுத்தலும் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் அதிகாரிகளுக்கு தெரிவித்து இதுவரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles