ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ரி – 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொள்கிறது.
இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு பெர்த் மைதானத்தில் இந்த போட்டி ஆரம்பமாகின்றது.
உலகின் அதிவேக வேகப்பந்து வீச்சிற்கான ஆடுகளம் என்று இந்த மைதானம் அழைக்கப்படுகிறது. இதனால் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
