498 மாணவர்களின் O/L பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தம்

க.பொ.த (சா/த) முடிவுகளின்படி தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 10 ஆயிரம் 863 பேர் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

அத்துடன், 498 பரீட்சார்த்திகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

மேலும், க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய 231,982 பேர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, 2021 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு சான்றிதழ்களை திங்கட்கிழமை (28) முதல் பெற்றுக்கொள்ள முடியும் எனவும்,ஒன்லைன் முறையில் அதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles