பாகிஸ்தானின் கராச்சியர்களிடையே பயம் மற்றும் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை உணர்வின் தெளிவான அறிகுறியாக, தெருக் குற்றங்கள் அதிகரித்து வருவதால், பல குடியிருப்பாளர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.
சமீபத்திய ஆய்வின்படி, பெருநகரத்தின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் இதுபோன்ற சம்பவங்களை ஒரு முறையாவது அனுபவித்துள்ளனர். கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியினர் ஆயுதமேந்திய கொள்ளைகள் மற்றும் துப்பாக்கி முனையில் விலையுயர்ந்த பொருட்களை அபகரித்தல் போன்றவற்றால் நேரடியாக இழப்பை சந்தித்துள்ளனர்.
“நாங்கள் நகரின் ஏழு மாவட்டங்களிலும் ஒரு ஆய்வை மேற்கொண்டோம், இது தெருக் குற்றங்களின் அதிகரிப்பு கராச்சிவாசிகளை மிகவும் பயமுறுத்துகிறது மற்றும் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துகிறது” என்று நாடு தழுவிய செயல்பாடுகளைக் கொண்ட Pulse Consultant எனும் ஆராய்ச்சி நிறுவனத்தின் காஷிஃப் ஹபீஸ் என்பவர் கூறினார்.
சமீபத்திய ஆய்வில், கராச்சியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்களிடம், பெருநகரங்களில் அதிகரித்து வரும் தெருக் குற்றங்கள் தொடர்பான அவர்களின் அனுபவங்கள் குறித்து அவர்களிடம் கேள்விகளை எழுப்பியது.
பயந்தபடி, மிகவும் தீவிரமான ஆபத்தான சூழ்நிலையை அவர்களின் பதில் சுட்டிக்காட்டியது. 69 சதவீதம் பேர், அல்லது 10 பேரில் ஏழு பேர், அவர்களது குடும்ப வட்டத்தில் அல்லது நண்பர்களில் யாரோ ஒருவர் தெருக் குற்றங்களுக்கு பலியாகி இருப்பதாக கூறுவதாக என்று திரு ஹபீஸ் கூறினார்.
தங்கள் சுற்றுவட்டத்தில் தெருக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக அறிந்த மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தவிர, அவர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள்.
16 வயது முதல் 55 வயது வரையிலான மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், 23 சதவீத கராச்சியர்கள் தெருக் குற்றவாளிகளால் நேரடியாக பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்துள்ளனர் என்று கூறுகிறது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையேயான எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காட்டும் காவல்துறையினரால் தொகுக்கப்பட்ட தெருக் குற்றங்களின் தரவு வெளிவந்த சில நாட்களுக்குப் பிறகு இது வெளிப்பட்டது. கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைப் பறிப்பதும், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் திருடப்படுவதும் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், உத்தியோகபூர்வ தரவு, நிலைமையின் உண்மையான குறிகாட்டியாக இல்லை, ஏனெனில் அதே காலகட்டத்தில் பெருநகரத்தில் தெருக் குற்றங்களுக்கு இரையாகிய எண்ணற்ற மக்கள் காவல்துறையை அணுக வேண்டாம் என்று முடிவு செய்தனர் என்பது பகிரங்க ரகசியம். மிகப்பெரிய நம்பிக்கையீனம் அல்லது அவர்களின் எஃப்ஐஆர்கள் சட்டத்தை அமல்படுத்துபவர்களால் பதிவு செய்யப்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.
கொள்ளைகளின் போது கொலை அல்லது காயம் 6.62 சதவீதம் வரை பதியப்படுகிறது, வீடு புகுந்து திருடுவது 20.98 சதவீதம், கார் பறிப்பு 29.34 சதவீதம், மொபைல் போன்களை பறிப்பதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாக 18.3 சதவீதம் அதிகரித்துள்ளது.