காற்று மாசு – முதல் மூன்று இடங்களுக்குள் பதுளை மாவட்டம்!

இலங்கையில் காற்றில் தூசியின் அளவு அதிகரித்து, மாசடைந்த மாவட்டங்களில் புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் பதுளை ஆகியன முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

இலங்கையின் முக்கிய நகர்ப்புறங்களில் சுற்றுப்புற காற்றின் தர நிலை தொடர்பில் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இன்று காலை விடுத்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

காற்று மாசு தரக்குறியீட்டின் பிரகாரம், 24 மணி நேரத்தில் இருக்கக்கூடிய தூசு துகள்களின் அளவு ஒரு கன மீட்டரில் இருக்கக்கூடிய 50 மைக்ரோகிராம் அளவு ஆகும்.

இலங்கையின் மூன்று மாவட்டங்கள் காற்று தரக்குறியீட்டில் ஆரோக்கியமற்ற எச்சரிக்கை நிலையான சிவப்பு நிற தரக்குறியீட்டை கொண்டுள்ளன.

புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களே ஆரோக்கியமற்ற எச்சரிக்கை நிலையை வௌிப்படுத்தியுள்ளன.

இதன் பிரகாரம், புத்தளத்தில் காற்று மாசு தரக்குறியீடு 174 ஆக காணப்படுவதுடன், யாழ்ப்பாணத்தில் 171 ஆகவும் பதுளையில் 160 ஆகவும் காணப்படுகின்றது.

இவ்வாறு ஆரோக்கியமற்ற சிவப்பு எச்சரிக்கை நிலையின்போது, மனிதர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதுடன், நோய்வாய்ப்படுவோருக்கு கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தலைநகரான கொழும்பில் காற்று மாசு தரக்குறியீடு 134 ஆக காணப்படுவதுடன், இது சுகதேகிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் நோய்வாய்ப்படக்கூடியவர்களே அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்றில் தூசின் அளவு அதிகரிக்கும்போது, அது குறித்து விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles