டயகமவில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து இன்று காலை 06.40 மணியளவில் கௌலஹேனா பகுதியில் வங்கியொன்றின்மீது சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேரூந்தில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தால் பணிக்கு செல்லும் பயணிகள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
