ஹப்புத்தளை, தம்பேதன பகுதிக்கு சுற்றுலா வந்த 20 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மட்டக்களப்பு மற்றும் இரத்தினப்புரி பகுதிகளைச் சேர்ந்த 20 பேரே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகி, ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியச்சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் 11.30 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
8 பெண்கள், 10 ஆண்களும் மற்றும் இரு சிறார்கள் என மொத்தம் 20 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ராமு தனராஜா










