மஸ்கெலியா டீசைட் தோட்டத்தில் ‘மொபைல்’ திருடன்!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை டீசைட் தோட்டத்தில் கடந்த இரு நாட்களாக கையடக்க தொலைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

லயன் குடியிருப்பொன்றை மையப்படுத்தியே இக்கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மூன்று வீடுகளில் இவ்வாறு கையடக்க தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளன என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். தனி நபரொருவர் இதன் பின்னணியில் செயற்படுகின்றாரா அல்லது குழுவொன்று இயங்குகின்றதா என்ற கோணத்திலும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

சாமிமலை நிருபர் ஞானராஜ்

Related Articles

Latest Articles