பதுளை, பசறை பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக சில அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
பல குடியிருப்புகளில் கூரைத்தகடுகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.
குறிப்பாக பசறை – பண்டாரவளை வீதியில் நமுனுகுலை 12 ஆம் கட்டைப் பகுதியில், வீதியோரங்களில் உள்ள மரங்கள் முறிந்து வீதியில் வீழ்ந்தமையினால் வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. ஏனைய சில பகுதிகளிலும போக்குவரத்து தடைபட்டுள்ளது. மின்தடையும் ஏற்பட்டுள்ளது.
மலர்வேந்தன், ராமு தனராஜ்
