கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பொது மக்களிடம், மஸ்கெலியா பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மஸ்கெலியா நகருக்கு வருபவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும் என்பதுடன், வாகனங்களில் பயனிப்பவர்களும் இந்தநடைமுறை பொருந்தும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.