பொலிஸாரால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், பொலிஸார் அவரைக் கைதுசெய்ய சென்ற போது, வீட்டின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
கம்பளை- போதலாபிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதென கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேல் மாடியிலிருந்து விழுந்த இளைஞன் படுகாயமடைந்து கம்பளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.