இந்திய-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் பென்டகன்

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் “மிக முக்கியமானவை” என்று பென்டகன் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பென்டகன் ஊடகச் செயலாளர் விமானப்படை பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் “இந்திய-அமெரிக்க உறவு தொடர்பாக என்னிடம் குறிப்பிட்ட அறிவிப்புகள் எதுவும் இல்லை, ஆனால் பாதுகாப்பு ஒத்துழைப்பு, தற்பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பொறுத்தவரை இது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மிக முக்கியமான உறவு. எனவே இந்தியத் தலைமையுடன் தொடர்ந்து ஒத்துழைக்க நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு கூட்டாளியாக இந்தியா நியமிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் நேசநாடுகள் மற்றும் கூட்டாளிகளுக்கு இணையாக இந்தியாவை வைக்கிறது.

அமெரிக்காவின் நேட்டோ அல்லாத நட்பு நாடான இந்தியாவுக்கே இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் பாதுகாப்பு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பப் பகிர்வுகளை அதன் நேசநாடுகள் மற்றும் பங்காளிகளுக்கு இணையான அளவில் எளிதாக்க அமெரிக்கா மேற்கொண்ட முன்னேற்றத்தை இது நிறுவனமயமாக்குகிறது. இது மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு மாற்றுவதற்கு அமெரிக்காவை எளிதாக்கும். இது அமெரிக்க-இந்திய பாதுகாப்பு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சியின் நிறுவன செயல்திறனையும் பென்டகனில் உள்ள இந்திய விரைவு எதிர்வினைக் கலத்தின் நீடித்த தன்மையையும் வலுப்படுத்தும்.

பாதுகாப்பு வர்த்தகம், கூட்டுப் பயிற்சிகள், பணியாளர் பரிமாற்றங்கள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடற்கொள்ளைக்கு எதிரான ஒத்துழைப்பு ஆகியவற்றில் தீவிரப்படுத்துதல் ஆகியவற்றுடன் இந்திய-அமெரிக்க மூலோபாய கூட்டுறவின் முக்கிய தூணாக பாதுகாப்பு உறவு வெளிப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட அமெரிக்காவுடன் இந்தியா அதிக இருதரப்பு பயிற்சிகளை நடத்துகிறது.

சீனாவும் ரஷ்யாவும் இணைந்து புதிய இரசாயன ஆயுதங்களை உருவாக்குவது குறித்தும் ரைடர் கருத்து தெரிவித்தார். “உலகெங்கிலும் உள்ள இரசாயனுஉயிரியல் திறன்களைப் பொறுத்தவரை, இது பாதுகாப்புத் துறை மிகவும் நெருக்கமாகக் கண்காணிக்கும். ரஷ்யா மற்றும் சீனா என்று வரும்போது, நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்போம்,” என்று அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வருவதாக பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அவர், பாகிஸ்தானின் உள் அரசியலில் ஈடுபடாமல், ஆப்கானிஸ்தானுக்குள்ளும், பிராந்தியம் முழுவதிலும் பயங்கரவாத அமைப்புகள் இருப்பதை நாங்கள் நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம்” என்றார்.

ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான மறைவிடமாக மாறக்கூடாது என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், “பயங்கரவாதத்தை எதிர்க்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டின்படி, நாங்கள் எல்லை தாண்டிய திறனைப் பேணுகிறோம், நமது தாயகத்தைப் பாதுகாப்பதில் தொடர்ந்து அதனைப் பராமரித்து நிலைநிறுத்துவோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles