கோட்டைவிட்டது பஞ்சாப் – 2 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி

பஞ்சாப் அணியுடான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 24ஆவது ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது.  .

இதில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை தெரிவு செய்தார். கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதி-ஷுப்மன் கில் களமிறங்கினர். பஞ்சாப் பந்துவீச்சாளர் சமி வீசிய பந்தில், ராகுல் திரிபாதி(4 ரன்கள்) பவுல்ட் ஆனார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரானா 2 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி சற்று தடுமாறியது. மறுமுனையில் நிதானமாக ஆடிய ஷுப்மன் கில் 57 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த இயன் மார்கன் 23 ரன்களிலும் அண்ட்ரே ரசல் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதற்கிடையில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாசி 27 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். நிதானமாக நிலைத்து நின்று ஆடிய இருவரும் அரை சதத்தைக் கடந்தனர்.

இந்நிலையில் மயங்க் அகர்வால் 56 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா பந்துவீச்சாளர் பிரசித் வீசிய 15வது ஓவரில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 16 ரன்களில் பவுல்ட் ஆனார். அடுத்து வந்த சிம்ரன் சிங்(4 ரன்கள்) பிரசித் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கே.எல்.ராகுல் 58 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து, பிரசித் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார். ஆட்டத்தின் இறுதியில் 2 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் மந்தீப் சிங்கின் விக்கெட் பறிபோனது. இதனால் 1 பந்திற்கு 7 ரன்கள் என்ற நிலை உருவானது. அப்போது சுனில் நரேன் வீசிய கடைசி பந்தை மேக்ஸ்வெல் பவுண்டரியை நோக்கி அடித்தார்.

பந்து பவுண்டரி லைனுக்கு மிக அருகில் சென்று விழுந்ததால் முடிவில் சிறிது குழப்பம் ஏற்பட்டு பின்னர் 4 ரன்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles