மோசமான ஆட்டத்தால் தோனியின் மகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்ததற்காக 12ஆம் வகுப்பு மாணவர் ஒரு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் செப்டம்பர் 19ஆம் திகதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது.
முதல்போட்டியில் மும்பை கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவியது.
பின்னர், பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு வெற்றியைப் பதிவு செய்தது. பின்னர், கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் மீண்டும் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் நல்லத் தொடக்கம் கிடைத்த போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் சென்னை தோல்வியைத் தழுவியது.
டோனியும் இந்தப் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தநிலையில், சமூக வலைதளங்களில் இருக்கும் சிலர் டோனி , சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒழுங்காக விளையாடவில்லையென்றால் டோனியின் ஐந்து வயது மகளான ஷிவா தோனியை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என்று அருவருக்கத்தக்க வகையில் பதிவிடப்பட்டது.
இது குறித்து ராஞ்சி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரைத்து வந்தனர்.
தோனியின் மைனர் மகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குஜராத்தின் முந்த்ராவில் இருந்து 16 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
நம்னா கபயா கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டார்” என்று கட்ச் (மேற்கு) காவல் கண்காணிப்பாளர் சவுரப் சிங் தெரிவித்தார்.