சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று (02) இரவு zoom கலந்துரையாடல் நடைபெற்றது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதியளித்தல் தொடர்பில் அனைத்து தரப்பினரிடையேயும் நம்பிக்கையான கருத்து ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.