தேயிலைத் தோட்டத்தில் மரமொன்று முறிந்து விழுந்ததால் கொழுந்து கொய்துகொண்டிருந்த இரு பெண் தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பலாங்கொட, பின்னவல- வலவ்வத்த பகுதியிலுள்ள அரசாங்கத்துக்குரிய பெருந்தோட்டமொன்றில் கொழுந்து பறித்துக்கொண்டிருக்கையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மரம் முறிந்து விழுந்ததால் மூவர் நசுங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மூவரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். எனினும், இருவர் உயிரிழந்துவிட்டனர். மற்றைய பெண்ணுக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருகின்றன. வலவ்வத்த பெருந்தோட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரே பலியாகியுள்ளனர்.
பலாங்கொட பகுதியிலும் கடந்த சில நாட்களாக கடும் காற்றுடன் அடைமழை பெய்துவருகின்றது.