310 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – குழந்தை பலி! ஐவர் படுகாயம்!!

ஹப்புதளை பகுதியில் விகாரகலை என்ற இடத்தில் ஆட்டோவொன்று விபத்திற்குள்ளாகியதில் ஒன்றரை வயது குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது. ஆட்டோ ஓட்டுநனர் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து, நேற்று (14) மாலை 6 மணியளவில் பெரகலை–வெள்ளவாயா பிரதான வழியில் கீழ்விகாரகலை என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

ஓட்டுநர் உட்பட ஆறுபேர் பயணித்த இவ் ஆட்டோ, பாதையைவிட்டுவிலகி 310 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் ஒன்றரை வயதுடைய சிறுவன், ஸ்தலத்திலேயே பலியானார். ஒருபெண் உட்பட ஐந்து பேர் கடுங்காயங்களுக்குள்ளாகி, ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைஅரசினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமுற்று ஆபத்தான நிலையிலுள்ள இருவர், தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஏனைய மூவர், ஹப்புத்தளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

எம். செல்வராஜா, பதுளை

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles