மட்பாண்டப் பொருட்களின் விற்பனை புத்தாண்டு காலப்பகுதியில் பெருவீழ்ச்சி

சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் விற்பனை செய்யும் நோக்கில் உற்பத்தி செய்யப்பட்ட பால் பொங்கும் பானைகள் உள்ளிட்ட மட்பாண்டப் பொருட்கள் விற்பனை இன்றி அவை தேங்கிக்கிடப்பதாகவும், பானைகளுக்கான தேவை இந்த ஆண்டு மிகக்குறைந்து , அதன் விற்பனையும், குறைந்து காணப்பட்டதாக பிரதேச மட்பாண்ட உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது ஒவ்வொரு வருட மார்ச் இறுதிக்குள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மண் பானைகளுக்கான பெரிய அளவிலான உத்தரவு கிடைப்பதாகவும், ஆனால் இம்முறை நிலைமை தலை கீழாக மாறி சுமார் 75% வீதம் வரையில் இதற்கான கேள்வி அதிக அளவில் குறைந்துள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்முறை மிகவும் சிரமப்பட்டு உற்பத்தி செய்த பால் பொங்கும் பானைகள் உள்ளிட்ட மண் உற்பத்தி பொருட்கள் அனைத்தும் தமது வீடுகளில் குவிந்து கிடப்பதாகவும் இவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து இருந்து கிடைக்கும் கேள்விக்கு ஏற்ப பொருட்களை தாராளமாக வழங்க முடியுமாக விருந்தது. ஆனால் இம்முறை அப்படியான ஒரு நிலை இல்லாதிருப்பது கவலைக்குரிய விடயம் எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தமது குடும்பங்களின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை காண நேரிடும் என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles