சர்வதேச தொழிலாளர் தினமான இன்று, நோர்வூட்டில் தனிநபர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
டிக்கோயா, வனராஜா தோட்டத்தை சேர்ந்த அன்புராஜ் என்ற தொழிலாளியே இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை இந்த தனி மனித போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலையம் முன்பாக உள்ள சந்தியில் திட்டு மேல் ஏறி நின்று, கவனயீர்ப்பு நடவடிக்கையில் இறங்கினார்.
அவர் வைத்து இருந்த பாதையில்.
1/பெருந்தோட்ட தொழிலாளர்களை தோட்ட காட்டான் என்று கூறுவதை உடன் நிறுத்த வேண்டும்.
2/வத்து தெமழு என்று கூறுவதை உடன் நிறுத்த வேண்டும்.
3/ பொருட்கள் விலை உயர்ந்த நிலையில் உள்ளது அதனைக் குறைக்க ஆட்ச்சியாளர்கள் முன் வர வேண்டும் எழுதப்பட்டிருந்தது.
