உச்சகட்ட பரபரப்பு – இரு ஆட்டங்களிலும் சுப்பர் ஓவர்! பஞ்பாப் அணி வெற்றி!

இரண்டாவது சூப்பர் ஓவரில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப் அணி. மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. ரோகித் சர்மா 9 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ரன்ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

38 ரன்களுக்குள் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. குயின்டன் டி காக் 53 ரன்களும், குருணால் பாண்ட்யா 34 ரன்கள் எடுத்தனர். பொல்லார்ட் அதிரடியாக ஆடி 12 பந்தில் 34 ரன்களும், நாதன் கவுல்டர் நைல் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.பஞ்சாப் சார்பில் ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கே எல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

அகர்வால் 11 ரன்னிலும், கிரிஸ் கெயில் 24 ரன்னிலும், நிகோலஸ் பூரன் 24 ரன்னிலும், மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். கேஎல் ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அசத்தினார்.அவர் 77 ரன்னில் வெளியேறினார்.

அதன்பின் ஆடிய தீபக் ஹூடா பொறுப்புடன் ஆடினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது. ஹூடா 23 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.மும்பை அணி சார்பில் பும்ரா, 3 விக்கெட்டும், ராகுல் சஹர் விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் பஞ்சாப் அணி விளையாடியது. கேஎல் ராகுலும், பூரனும் இறங்கினர். மும்பை சார்பில் பும்ரா பந்து வீசினார்.

முதல் பந்தில் ஒரு ரன் கிடைத்தது. 2வது பந்தில் பூரன் அவுட்டானார். 3வது பந்தில் ஒரு ரன்னும், 4வது பந்தில் ஒரு ரன்னும், 5வது பந்தில் 2 ரன்னும் கிடைத்தது. 6வது பந்தில் ரகுல் அவுட்டானார். சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து, மும்பை அணி சார்பில் ரோகித் சர்மா, டி காக் களமிறங்கினர். பஞ்சாப் சார்பில் ஷமி பந்து வீசினார்.

முதல் பந்தில் ஒரு ரன்னும்,2வது பந்தில் ஒரு ரன்னும், 3வது பந்தில் ஒரு ரன்னும் கிடைத்தது. 4வது பந்தில் ரன் இல்லை. 5வது பந்தில் ஒரு ரன் கிடைத்தது. கடைசி பந்தில் ஒரு ரன் மட்டும் கிடைக்க போட்டி மீண்டும் சமனானது.

இதையடுத்து, 2வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. அடுத்து இறங்கிய பஞ்சாப் அணி 15 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles