இலங்கையில் பெரிய துறைமுக வளாகத்தை கட்டும் சீனா! இந்தியா மற்றும் அமெரிக்காவின் எதிர்வினை என்னவாக இருக்கும்?

கடந்த ஆண்டு இலங்கையில் உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையானது பரவலான அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தூண்டியதோடு, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறியது. ஆனால் தற்போது இலங்கை பொருளாதார மீட்சியைத் தொடங்க எதிர்பார்த்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் பாரிய வளாகத்தில், 392 மில்லியன் டாலர் மதிப்பீட்டைக் கொண்ட சீன வணிகர்கள் குழுமத்தின் (CMG) முதலீடானது, இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தாததற்குப் பிறகு, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதல் பெரிய வெளிநாட்டு முதலீடு ஆகும்.

துறைமுக போக்குவரத்து மையத் திட்டமானது, சீன வணிகர்கள் குழுமத்தின் “இலங்கையில் குவிக்கப்பட்ட முதலீட்டை… 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் கொண்டு செல்லும், இது தீவின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனமாக மாறும்” என்று நிறுவனம் கடந்தவாரம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

துபாய்க்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ஒரே ஆழ்கடல் துறைமுகமான கொழும்பில் போக்குவரத்து வளாகத்தை நிர்மாணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனத்தில் CMG ஆனது 70 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும்.

இந்தத் திட்டத்தை தெற்காசியாவின் மிகப்பெரிய தளவாட மையம் என விவரித்த CMG, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதை முடிக்க எதிர்பார்ப்பதாகக் கூறியது.

CMG இலங்கையின் தெற்கு முனையில் உள்ள ஹம்பாந்தோட்டையில் உள்ள துறைமுக வளாகத்தையும் நிர்வகிக்கிறது.

2015 ஆம் ஆண்டு வரை ஒரு தசாப்த காலம் நாட்டை ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட அதியுயர்ந்த பராமரிப்பு செலவைக் கொண்ட திட்டங்களில் ஒன்றாக அந்த துறைமுகம் கருதப்பட்டது.

இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த கடன் பொறி என்று பலர் விமர்சித்த திட்டங்களுக்காக ராஜபக்ச சீனாவிடம் இருந்து பெருமளவு கடன் வாங்கினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக 2017ஆம் ஆண்டு சீனாவிடம் இருந்து பெறப்பட்ட பாரிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், அதனை 99 வருட குத்தகைக்கு 1.12 பில்லியன் டொலர்களுக்கு CMG நிறுவனத்திடம் இலங்கை ஒப்படைத்தது.

சீனா தனது பிரம்மாண்டமான Belt and Road முன்முயற்சியின் கீழ் ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பாவில் திட்டங்களுக்காக பில்லியன்களை கடனாக வழங்கியுள்ளது, இது நாடுகளை கடனில் மூழ்கடிப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இலங்கையின் துறைமுகங்களை அணுகுவதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் சீனா ஒரு கடற்படை நன்மையைப் பெறுவது குறித்து அண்டை நாடான இந்தியாவும் அமெரிக்காவும் கவலை தெரிவித்துள்ளன.

எனினும் இலங்கையின் துறைமுகங்கள் எந்தவொரு இராணுவ நோக்கத்திற்கும் பயன்படுத்தப்பட மாட்டாது என இலங்கை வலியுறுத்தியுள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles