சீன அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் இன்று (23) இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இங்கு மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயஙகும் 26,000 மீன்பிடி கப்பல்களுக்கு 150 லீட்டர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும்.
இதன் ஆரம்ப நிகழ்ச்சி இன்று பாணந்துறை மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் வி. ஷென் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
