அமைச்சரவை அமைச்சர்கள் தமது கீழ் உள்ள இராஜாங்க அமைச்சர்களை சுயாதீனமாக செயற்படுவதற்கு இடமளிப்பதில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முறையிட்டுள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்கள், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற விசேட கூட்டமொன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே டயானா இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கு விடயதானங்களை பகிர்ந்தளிக்கவில்லை.
தனக்கு மாத்திரம் அல்ல இராஜாங்க அமைச்சர்கள் பலர் இந்த நிலைமையை எதிர்கொண்டுள்ளனர் எனவும் டயானா கமகே குறிப்பிட்டுள்ளார்.
