கம்பஹா மாவட்டம் முழுவதும் இன்றிரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு இவ்வாறு அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் கம்பஹா மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுலில் இருந்தது.
