முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் நாடு எதிர்கொண்ட நிலைமையை தற்போதைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க கட்சி எடுத்த தீர்மானம் மகிழ்ச்சியளிகின்றது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
