நாவலபிட்டிய, மொன்றிகிறிஸ்ரோ தோட்டத்தில் தொட்டிலில் கழுத்து இறுகி 9 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இத்துயர் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலிருந்த மற்றுமொரு சிறு குழந்தைக்காக சாரியில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் குறித்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.










