மொனறாகலையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி காவலாளியொருவர் உயிரிழந்துள்ளார்.
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலுவிட்டியா எல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள சேனை ஒன்றில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த 40வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வெலிவத்தரோடை ரத்வனவனபிட்டிய பகுதியை சேர்ந்த நபர் என
மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா