உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக நவ ஶ்ரீலங்கா கட்சியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியினரும் இதற்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி நாட்டை சிறப்பாக வழிநடத்துவதால் அவரின் திட்டங்களை ஆதரிக்க வேண்டும் எனவும் குமார வெல்கம கேட்டுக்கொண்டுள்ளார்.