கட்சியை முழுமையாக மறுசீரமைத்து, புதிய பலத்துடன் மக்கள் முன் செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில், புதிய கட்சி யாப்புக்கான அங்கீகாரம் பெறப்படவுள்ளது.
அத்துடன், அன்றைய தினம் தலைமைத்துவ சபையொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
ருவான் விஜேவர்தன, வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க, சாகல ரத்நாயக்க, ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தலைமைத்துவ சபைக்கு நியமிக்கப்படவுள்ளனர் என தெரியவருகின்றது.