பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் – 44 பேர் பலி! 200 பேர் காயம்!!

பாகிஸ்தானில் அரசியல் கட்சியொன்றின் கூட்டத்தின்மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 200 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில், கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உட்பட பலர் பலியாகினர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்தனர். மனித குண்டு வெடிப்பு மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசியல் கட்சி கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 200 இற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

 

Related Articles

Latest Articles