அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

இந்த வருடம் 860,000 இற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் 20 நாட்களில் 98,831 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளில் இந்தியாவிலிருந்து 19,804 சுற்றுலா பயணிகளும், பிரித்தானியாவிலிருந்து 12,188 சுற்றுலா பயணிகளும் இருப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, இதுவரை 866,744 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அவ்வகையில், இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், சீனாவில் இருந்தும் 35,000க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles