அக்கரப்பத்தனை, ஆக்ரோ பகுதியில் உள்ள ஒருவருக்கும் கொரோன வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்துள்ளார். அண்மையில் வீடு திரும்பி அவரிடம் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே வைரஸ் தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
க.கிசாந்தன்