பாதை எப்போது புனரமைக்கப்படும்?

ஹட்டன் – கொழும்பு பிரதான பாதையில் குயில்வத்த பகுதியில், சில மாதங்களுக்கு முன்னர் அடை மழைபெய்தபோது பாதையின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து ஒரு வழி பயணமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் வீதியை புனரமைப்பதற்கு இது வரைக்கும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கபடவில்லை.

இதனால் போக்குவரத்தில் ஈடுப்படும் வாகனங்களின் சாரதிகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.

இரவுவேளையில் வாகனங்களை செலுத்தும் போது சேதமடைந்த பாதை தொடர்பில் தெரிந்துக் கொள்ள எந்தவிதமான அறிவுறுத்தல்களும் இல்லை எனவும் சாரதிகள் கூறுகின்றனர். பாதிப்டைந்த இடத்தில் பாதசாரிகளின் கடவையும் காணப்படுகின்றது. தற்போது பாதசாரிகளினால் அதனை பாவிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறான நிலையில் இந்த பாதையை உடனடியாக திருத்த வேண்டிய பொறுப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பாகும். இதனை உடனடியாக புனரமைத்து தருமாறு சாரதிகள் கோருகின்றனர்.

மக்கள் செய்தியாளர் – பா. திருஞானம்

Related Articles

Latest Articles