நாட்டில் நேற்று மாத்திரம் 10 ஆயிரத்து 740 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய பரிசோதனை எண்ணிக்கை இதுவாகும்.
அத்துடன், இதுவரையில் 4 லட்சத்து 69 ஆயிரத்து 258 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 75 தனிமைப்படுத்தல் மையங்களில் 7 ஆயிரத்து 530 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில் 58 ஆயிரத்து 396 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துகொண்டு வெளியேறியுள்ளனர்.
அதேவேளை, மினுவங்கொட கொரோனா கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5ஆயிரத்து 398 ஆக அதிகரித்துள்ளது.
