பதுளை பிரதான பஸ் நிலையத்திலிருந்து தூர இடங்களுக்குச் செல்லும் இ.போ.ச. பஸ்களுக்கு மறு அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா,தொற்று அச்சமே, இத்தடைக்குபிரதானகாரணமென்று, இ.போ.ச. பதுளை டிப்போ பணிப்பாளர் தெரிவித்தார்.
பதுளைபிரதான பஸ் நிலையத்திலிருந்து கொழும்பு, யாழ்ப்பாணம்,காலி,பானந்துறை, கண்டி, அலுத்கம, இரத்தினபுரி, மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்குச் செல்லும் இ.போ.ச. பஸ்களுக்கே,மேற்படிதடைவிதிக்கப்பட்டுள்ளது.
பொதுசுகாதார சேவையினர் மீண்டும் அறிவிக்கும் வரை, இத் தடைகள் நடைமுறையிலிருக்குமென்றும்,பதுளைடிப்போபணிப்பாளர் மேலும்,தெரிவித்தார்.
எம். செல்வராஜா, பதுளை